For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'10th/ITI' தேர்ச்சி பெற்றவரா.?தென்னக ரயில்வே வேலை வேலைவாய்ப்பு..!! 2700+ காலியிடங்கள்.!

09:50 PM Feb 04, 2024 IST | 1newsnationuser7
 10th iti  தேர்ச்சி பெற்றவரா  தென்னக ரயில்வே வேலை வேலைவாய்ப்பு     2700  காலியிடங்கள்
Advertisement

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 2700 க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 15-ஆக இருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான அதிகபட்ச வயது வரம்பு 22/24 வயதுக்குள் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தொழிற்கல்வி அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான உதவித்தொகை 202/2019 ரயில்வே விதிகளின்படி வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சரிபார்த்து தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 28.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்சி/எஸ்டி மற்றும் பிடபிள்யுடி பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை நடத்தும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement