முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’யாராவது உதவி பண்ணுங்க’..!! ’நிலைமை ரொம்ப மோசம்’..!! நடிகர் விஷ்ணு விஷால் அதிர்ச்சி பதிவு..!!

01:51 PM Dec 05, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து மாநகராட்சி மேயரையும், அதிகாரிகளையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

Advertisement

அதேபோல் நடிகர் ரோபோ சங்கரும் தன் வீட்டின் முன் தேங்கிய வெள்ளநீரை வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும், தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக்கூறி எக்ஸ் தளத்தில் தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த பதிவில், ”காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்லை, வைஃபை இல்லை, போன் சிக்னல் இல்லை, எதுவுமே இல்லை. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Tags :
உதவிசென்னைநடிகர் விஷ்ணு விஷால்மிக்ஜாம் புயல்
Advertisement
Next Article