முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை வந்தடைந்தது பாடகி பவதாரிணியின் உடல்..!! சொந்த ஊரில் இறுதிச்சடங்கு..!!

04:32 PM Jan 26, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

Advertisement

இவரது இந்த திடீர் மறைவுச் செய்தியை அறிந்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், இவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இசைஞானி இளையராஜாவின் வீட்டில் இன்று மாலை 6 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள பவதாரிணியின் உடல், நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இன்று இரவு தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பவதாரிணியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறும் நிலையில், இளையராஜா தேனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags :
சென்னைதேனி மாவட்டம்பாடகி பவதாரிணியுவன் சங்கர் ராஜா
Advertisement
Next Article