For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சித்தராமையாவுக்கு துப்பாக்கியுடன் மாலை அணிவிப்பு!… காங்., தொண்டரின் அதிர்ச்சி சம்பவம்!

07:40 AM Apr 09, 2024 IST | Kokila
சித்தராமையாவுக்கு துப்பாக்கியுடன் மாலை அணிவிப்பு … காங்   தொண்டரின் அதிர்ச்சி சம்பவம்
Advertisement

Karnataka: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியுடன் சென்று முதல்வர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Advertisement

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக மாநிலங்கள் முழுவதும் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு தொகுதி காங்., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சித்தராமையா திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது காங்., தொண்டர் ஒருவர் துப்பாக்கியுடன், முதல்வர் பிரசார வேனில் ஏறி மாலை அணிவித்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Readmore:செம குட் நியூஸ்..!! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65..!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

Advertisement