அதிர்ச்சி..!! வீட்டில் துர்நாற்றம்..!! கதவை திறந்த போலீஸ்..!! எரிந்த நிலையில் 3 உடல்கள்..!! கொலையின் பின்னணி என்ன..?
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் குமார். ஐ.டி ஊழியரான இவர், ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் நிஷாந்த் குமார் தனது பாட்டியான கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து புகை நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து சந்தேகமடைந்த பொதுமக்கள், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிகுப்பம் போலீசார், வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதன் குமார், அவரது தாயார் கமலீஸ்வரி, அவரது மகன் நிஷாந்த் குமார் மூவரும் மூன்று அறைகளில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக்கிடந்துள்ளது.
இதனால் யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தங்கத்தின் எடை மற்றும் அளவை கவனமாக நோட் பண்ணுங்க..!! இதையெல்லாம் பரிசோதனை செய்யுங்க..!!