For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!! பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல்நலக்குறைவு..!!

01:12 PM Mar 27, 2024 IST | Chella
தேர்தல் பரப்புரையில் பரபரப்பு     பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் கே என் நேருவுக்கு உடல்நலக்குறைவு
Advertisement

தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில், கொசூர் பகுதியில் பரப்புரை தொடங்கியபோது, அமைச்சர் கே.என்.நேரு, அதில் கலந்துகொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்து வந்தார்.

அப்போது "எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு புறப்படுகிறேன்" என கூறிய அமைச்சர் கே.என்.நேரு, "எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சனைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்" என கூறிவிட்டு பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர், தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Read More : அதிகார துஷ்பிரயோகம்..!! அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மீது அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்..!!

Advertisement