முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே...! கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு...!

Schools in Tamil Nadu are set to open tomorrow after the summer vacation is over.
06:15 AM Jun 09, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டும்.

அதே போல மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கலை, பள்ளி தொடங்கப்படும் முதல் நாளான நாளை அனைத்து பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Edu departmentschoolSCHOOL REOPENstudents
Advertisement
Next Article