'விளம்பரத்தில் நடிக்க 2 கோடி..' No சொன்ன சாய்பல்லவி! - குவியும் பாராட்டு..
பிரபல நடிகையான சாய்பல்லவி அழகுபொருள் தயாரிப்பு நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த மாரி 2, ஷ்யாம் சிங்கா ராய் என பல படங்களும் ஹிட் அடித்துள்ளன.
மேக்கப் சாதனங்கள் மீது பெரிதும் நாட்டமில்லாத இவர், படங்களில் நடிக்கும் போதும் கூட மிக அவசியமான கதாபாத்திரம் என்றால் மட்டுமே லேசான மேக்கப் போட்டுகொள்கிறார். நிறைய படங்களில் மேக்கப் இல்லாமலேயே வரும் சாய் பல்லவிக்கு இப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.
பிரபலமான நடிகர், நடிகைகளை பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான விளம்பர படத்தில் நடிக்க வைப்பது வழக்கம். இதற்காக ஒரு படத்தில் அவர்கள் நடிப்பதற்கு அளிக்கப்படும் சம்பளத்தை சில மணி நேர விளம்பர ஷூட்டிங்கிற்கே நிறுவனங்கள் தருவதால் பலரும் விளம்பர படங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், அவரை அழகுசாதனப் பொருளின் விளம்பரத்தில் நடிக்க வைக்க பிரபல நிறுவனம் ஒன்று அணுகியிருக்கிறது.
சாய்பல்லவியை அந்த விளம்பரத்தில் நடிக்க வைக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறது நிறுவனம். ஆனால், தான் நடிக்கும் படங்களிலேயே மேக்கப் போடுவதை விரும்பாத சாய்பல்லவி, இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். மேலும் கூடுதலாக பணம் தரவும் நிறுவனம் முன்வந்திருக்கிறது.
காசுக்காக பணமோசடி நிறுவன விளம்பரங்களிலும், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களிலும் நடிகர்கள் நடித்து வரும் நிலையில், தன் கருத்துக்கு எதிரான விஷயத்தை எவ்வளவு பணம் கொடுத்தும் நடிக்க மறுத்திருக்கிறார் சாய்பல்லவி. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.