For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிப்பு..!! அறிவித்தது யார் தெரியுமா..?

Punjab businessman Shivraj Singh has announced a reward of Rs.
03:00 PM Jun 07, 2024 IST | Chella
கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண்ணுக்கு ரூ 1 லட்சம் சன்மானம் அறிவிப்பு     அறிவித்தது யார் தெரியுமா
Advertisement

நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது அவரை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சோதித்தார். பின்னர், கங்கனாவை குல்விந்தர் கவுர் அடித்துவிட்டார். அதோடு டெல்லியில் போராடிய விவசாயிகளையும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் அவதூறாக பேசியதற்காக இந்த அடி என்று கூறினார் குல்விந்தர். பின்னர், மற்ற பாதுகாவலர்கள் கங்கனாவை சூழ்ந்து கொண்டு அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச்சென்றனர்.

Advertisement

இந்நிலையில், குல்விந்தர் கவுரின் சகோதரர் ஷெர் சிங் விவசாயிகள் சங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். விவசாயிகளோடு நெருங்கிய தொடர்புடைய குல்விந்தரின் செயலை பாராட்டி பஞ்சாப் தொழிலதிபர் சிவ்ராஜ் சிங் என்பவர் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார். அதோடு மற்றொருவர் குல்விந்தர் சிங்கை பாராட்டி சோசியல் மீடியாவில் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். குல்விந்தர் சிங் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும், அவர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Read More : அங்கீகாரம் பெற்ற கட்சி..!! சீமான், திருமாவளவனுக்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து..!!

Tags :
Advertisement