For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..!!' எங்க இருக்காங்க தெரியுமா?

03:52 PM May 30, 2024 IST | Mari Thangam
 இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்      எங்க இருக்காங்க தெரியுமா
Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சில குடும்பங்கள் அரசர் போலவே வாழ்ந்து வருகின்றன. அந்த குடும்பங்களுக்கு மக்கள் இன்னும் அரச மரியாதையை அளித்து வருகின்றனர். இன்னும் இந்த குடும்பங்கள் தங்கள் அரச பரம்பரை விஷயங்களை பின்பற்றி வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

Advertisement

அவர்கள் தங்கள் மூதாதையர் சொத்துக்களையும் செல்வத்தையும் தங்கள் மூலதனமாக மாற்றி, ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்கின்றனர். சாதாரண மக்களால் கற்பனை செய்ய முடியாத செல்வங்களைக் கொண்ட இந்தியாவின் பணக்கார அரச குடும்பங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேவார் வம்சம் :

மகாராணா பிரதாப் போன்ற பெரிய மன்னர்களை கொண்ட செழிப்பான வம்சமாக மேவார் வம்சம் பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறையின் சந்ததியினர் உதய்பூரில் வசிக்கின்றனர். இந்த குடும்பத்தின் தற்போதைய தலைவராக அரவிந்த் சிங் மோவார் உள்ளார். இந்திய பணக்கார குடும்பங்களில் அரவிந்த் சிங்கின் குடும்பமும் ஒன்றாகும்.

மோவார் வம்சத்தில் 76 ஆவது பாதுக்காவலராக இவர் உள்ளார். அரவிந்த் சிங் தன்னை பெயரளவில் மட்டுமே மன்னர் என சொல்லிக்கொள்பவர். உண்மையில் அவர் ஒரு தொழிலதிபர். ஹெச்.ஆர்.ஹெச் ஹோட்டல் குழுமத்தின் தலைவராக இவர் இருக்கின்றார். அரவிந்த் சிங்கும் அவரது மனைவி மகாராணி விஜயராஜும் உதய்பூர் நகரில் உள்ள அரண்மனையில் வசிக்கின்றனர். அதில் ஒரு பகுதி சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளன.

வாடியார் வம்சம் :

வாடியார் வம்சமானது கிருஷ்ணரின் யதுவன்ஷி குல வம்சத்திடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் சிம்மாசனம் இன்றும் கூட மைசூர் அரண்மனையில் உள்ளது. தற்போது இந்த வம்சத்தின் தலைவராக 27 வயதான யதுவீர் கிருஷ்ணாடுத்தா சமராஜ் வாடியார் இருக்கிறார். ஆனால் அவர் இந்த தலைமுறையின் நேரடி வாரிசு அல்ல.

ஜோத்பூரின் ரத்தோர் குடும்பம் :

ஜோத்பூரின் அரச குடும்பம் இந்தியாவின் மிகப்பெரிய அரசக் குடும்பங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவின் சிறந்த சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அரண்மனைகளின் உரிமையாளர்கள் அவர்கள்தான். தற்போது, மகாராஜா கஜ் சிங் II அரசக்குடும்பத்தின் தலைவராக உள்ளார், மேலும் இந்த குடும்பம் உலகின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாக ஜோத்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான உமைத் பவனையும், மெஹ்ரான்கர் கோட்டையையும் கொண்டுள்ளது.

ஜெய்ப்பூரின் அரச குடும்பம் :

ஜெய்ப்பூரின் பிரபல அந்தஸ்த்தை பெற்ற அரச தலைமுறையில் இதுவும் முக்கியமான அரச குடும்பமாக உள்ளது. பவானி சிங் என்பவர் இந்த குடும்பத்தின் கடைசி தலைவராக இருந்தார். அவருக்கு எந்த வாரிசுகளும் இல்லாத காரணத்தால் பவானி சிங் தனது வயதான காலத்தில் தனது மகள் தியா குமாரியின் மகன் பத்மநாத் சிங்கை தத்தெடுத்தார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இளம் இளவரசன் பத்மநாத் ஜெய்ப்பூரின் மகாராஜாவானார். அவர் ஒரு தேசிய அளவிலான போலோ வீரர் ஆவார்.

பரோடாவின் கெய்க்வாட்ஸ் குடும்பம் :

முதலில் புனேவில் இருந்து பரோடா வந்த கெய்க்வாட்ஸ் 18 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்து பரோடாவில் ஆட்சியை பிடித்தார். தற்போது 52 வயதான சமர்ஜித்சின் என்பவர் இந்த தலைமுறையின் தலைவராக உள்ளார். அவர் அரியணை ஏறியபோது 20,000 கோடிகளுக்கும் அதிகமான சொத்துக்களை அவர் பெற்றார். பரோடாவின் கெய்க்வாட்ஸ் பரம்பரை லக்ஷிமி விலாஸ் என்னும் அரண்மனையை சொந்தமாக கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தனியார் இல்லங்களில் ஒன்றாகும்.

போன்சலேஸ் மாளிகை :

இந்தியா முழுவதுமே மிகவும் புகழ்பெற்ற அரசர்களில் சத்ரபதி சிவாஜியும் ஒருவர் ஆவார். சத்ரபதிகளின் அரசக் குடும்பங்கள் தற்சமயம் கோலாப்பூர், சதாரா, நாக்பூர், முடோல், சவந்த்வாடி மற்றும் தஞ்சாவூர் போன்ற பல மாவட்டங்களில் சிதறிக்கிடக்கின்றன.

சதாராவின் உதயன் ராஜே என்பவர் 13 வது சத்ரபதி பட்டத்தை வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஒரு அரசியல்வாதி ஆவார், தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இவர் தன்னிடம் 170 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை தெரிவித்தார்.

படோடியின் நவாப்கள் :

அந்த காலத்தில் நவாப்கள் படோடி என்னும் இடத்தில் ஆட்சி செய்து வந்தனர். இந்த நவாப் வம்சத்தில் கடைசி மகாராஜாவாக மன்சூர் அலிக்கான் படோடி என்பவர் இருந்தார். ஒரு நவாப் என்பதை தாண்டி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். அவர் நடிகை ஷர்மிளா தாகூரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு வாரிசான சைஃப் அலிக்கான் தற்போதைய படோடி நவாப்பாக இருந்து வருகிறார். இவர் ஒரு பாலிவுட் நடிகர் ஆவார்.

Read more ; ‘அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..!!’ ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு!! சிறப்பம்சங்கள் என்ன?

Tags :
Advertisement