For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண் திருஷ்டி அடியோடு விட்டுவிலக உடனடியாக இதை மட்டும் பண்ணுங்க போதும்.!?

05:35 AM Jan 31, 2024 IST | 1newsnationuser5
கண் திருஷ்டி அடியோடு விட்டுவிலக உடனடியாக இதை மட்டும் பண்ணுங்க போதும்
Advertisement

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்ற பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒருவரின் கண் திருஷ்டி என்பது குடும்பத்திலும், உடல் நலத்திலும் பல்வேறு பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு கண் திருஷ்டிக்கு சக்தி அதிகம். இந்த கண் திருஷ்டி உடனடியாக நீங்க ஒரு சில பரிகாரங்கள் பண்ணலாம். எப்படி பண்ண வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.

Advertisement

முதலில் கடுகு, மிளகு, எலுமிச்சம் பழம், நல்லெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் கடுகை பாதியளவு போட்டு அதில் 10 மிளகு, முழு எலுமிச்சம் பழம் சேர்க்கவும். பின்பு அதை வீட்டில் உள்ள அனைவரது கண்ணில் படும்படி வைக்க வேண்டும். இதை ஒரு நாள் முழுவதும் அதே இடத்தில் வைத்துவிட்டு இரண்டு நாள் கழித்து எலுமிச்சம் பழத்தை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி வடக்கு மற்றும் மேற்கு பக்கமாக வீச வேண்டும்.

பின்பு கடுகு மற்றும் மிளகு எடுத்து வெள்ளைத் துணியில் கட்டி நல்லெண்ணெய் ஊற்றி எரிய விட வேண்டும். இவ்வாறு எரியும்போது கடுகு மற்றும் மிளகு வெடித்து வரும். இதை பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும். இப்படி வெடிக்கும் போது குடும்பத்தின் மீதும், நம் மீதும் விழுந்த கண் திருஷ்டி விட்டு விலகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு சித்தர்கள் உடல்நலத்துக்கு நன்மையை ஏற்படுத்தும் மூலிகைகளைக் குறித்து கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குப்பைமேனி செடியை வைத்து கண் திருஷ்டியை எவ்வாறு விரட்ட வேண்டும் என்று ஓலைச்சுவடியில் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர் என்பது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாகவே இருந்து வருகிறது.

Tags :
Advertisement