For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தையின் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ..!! 15 வினாடிக்காக இப்படியா செய்வது..?

A woman risked not only her life but also the life of a child to take a reel video.
02:22 PM Sep 20, 2024 IST | Chella
குழந்தையின் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ     15 வினாடிக்காக இப்படியா செய்வது
Advertisement

ரீல்ஸ் மோகம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பலரும் ரீல்ஸ் மோகத்தால் உயிரையும், உறவுகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், ஒரு வினோதமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது உயிரை மட்டுமின்றி, ஒரு குழந்தையின் உயிரையும் பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

Advertisement

ஒரு கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு குழந்தையுடன் நடனமாடியபடியே வீடியோவைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், குழந்தையைக் கவனக்குறைவாகப் பிடித்துக் கொண்டே கேமரா முன் போஸ் கொடுப்பதற்காக அந்தப் பெண் கைகளை திரும்பத் திரும்ப மாற்றிக் கொண்டிருக்கிறார். குழந்தை பெண்ணின் ஒரு காலில் ஒட்டிக் கொண்டிருப்பதை வீடியோவில் பார்க்கலாம். இருப்பினும் அந்த பெண், பாடலுக்கு ஏற்ப நடனமாடுவதில் முற்றிலுமாக மூழ்கி விட்டதால், 15 வினாடி ரீலுக்காக எல்லாவற்றையும் பணயம் வைத்து, தனது உயிர் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை அந்தப் பெண் முழுவதுமாக மறந்த நிலையில், காணப்படுகிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. "இன்றைய உலகில் பொறுப்பான தாயாக இருப்பதை விட சோசியல் மீடியாவில் கிடைக்கும் புகழ் போதை முக்கியமானதாக இருப்பது வருத்தமளிக்கிறது. அதற்கு இது சாட்சியாக இருப்பது மிகவும் கொடுமை" என்று ஒரு எக்ஸ் பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More : ’நாங்க மும்பை போலீஸ் பேசுறோம்’..!! மக்களே உஷார்..!! லட்சக்கணக்கில் பணம் பறிபோகும் அபாயம்..!!

Tags :
Advertisement