மக்களே... இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும்...! தமிழக அரசு அறிவிப்பு...!
நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.