முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் அட்டைதாரர்களே..!! டிசம்பர் 9ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

05:30 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வழங்காமல் அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு உரிமைத் தொகை திட்டம் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

Advertisement

இதனால், அவர்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. அதேபோல் ரேசன் கார்டில் பெயர் நீங்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கும் அவை கிடைக்காததால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டிசம்பர் 9ஆம் தேதி ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகள் தொடர்பான சேவைகள் அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதனால், ரேசன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுரேஷன் கடைகள்ரேஷன் பொருட்கள்
Advertisement
Next Article