முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rape | 'வேலை கேட்க சென்ற நர்ஸ்'..!! 'வெறித்தனமாக பாய்ந்த டாக்டர்'..!! அரண்டுபோன மருத்துவமனை..!!

05:31 PM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அசாம் மாநிலத்தில் வேலை கேட்டு மருத்துவமனைக்குச் சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர் வேலை கேட்டு மருத்துவமனை ஒன்றை அணுகினார். அங்கு அவர் மருத்துவமனையின் உரிமையாளரையும், மூத்த மருத்துவரையும் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து தனி அறையில் நர்சை, இன்டர்வியூ செய்த மருத்துவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்தப் பெண் அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து, தனது குடும்பத்தினரிடம் அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து, தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்கார முயற்சி குறித்து உள்ளூர் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Read More : Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

Advertisement
Next Article