முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்..!! திடீரென கேட்ட சிறுமியின் சத்தம்..!! இசை ஆசிரியரின் பாலியல் இம்சை..!! பாய்ந்தது போக்சோ..!!

The parents went downstairs leaving the girl alone saying that it was a known person. After some time, the girl's scream was heard.
02:15 PM Oct 21, 2024 IST | Chella
Advertisement

வீட்டில் மழைநீர் புகுந்ததால் பாதுகாப்பாக தஞ்சம் புகுந்த பள்ளி சிறுமியிடம் இசை ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் மழைநீர் புகுந்தது. இதனால், மாடியில் காலியாக இருக்கும் அறை ஒன்றில் தற்காலிகமாக தங்க கட்டட உரிமையாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Advertisement

இதனால், மாடி அறையை சுத்தம் செய்யும் பணியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இசை ஆசிரியர் ஒருவரும் உடன் இருந்துள்ளார். தெரிந்த நபர் தானே என்று சிறுமியை தனியாக விட்டுவிட்டு பெற்றோர் கீழே சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பின்னர், ஓடி வந்த பெற்றோர் பார்த்தபோது சிறுமி கண்ணீர் மல்க அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, இசை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர், ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியரை கண்டித்ததோடு, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆசிரியர் சுரேந்தரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”தினமும் இப்படி குளிப்பதால் கூட ஆண்மை பறிபோகும்”..? உடனே மாத்திக்கோங்க..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Tags :
சிறுமிபாலியல் தொல்லைமழைநீர்மாடி
Advertisement
Next Article