For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

07:57 AM Dec 08, 2023 IST | 1newsnationuser6
சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மழை     வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த அதீத கனமழையால் சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முழுதாக திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நின்று 4 நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாத நிலை தொடர்கிறது.

Advertisement

புயல் ஓய்ந்த பின்னரும் சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், ராமநாதபுரம் என 15 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement