முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு..!! சிக்குமா முக்கிய ஆவணங்கள்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!!

Officials of the enforcement department are conducting raids at the places belonging to former minister Vaithilingam.
08:21 AM Oct 23, 2024 IST | Chella
Advertisement

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் இவர், தற்போது ஓபிஎஸ் அணியின் உள்ளார். 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இந்நிலையில், வைத்திலிங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அவரது 2 மகன்களான பிரபு மற்றும் சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் இன்று, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை ஒரத்தநாடு அருகே உறந்தையான்குடிகாடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 11 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் சோதனை நடைபெறுகிறது. விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : வழக்கு தொடர்பாக வந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த வக்கீல்..!! வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..!!

Tags :
அமலாக்கத்துறைஓபிஎஸ் அணிவைத்திலிங்கம்
Advertisement
Next Article