முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வருங்கால வைப்பு நிதி... புதிதாக 15.62 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்...!

09:13 AM Feb 21, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்காலிக ஊதியத் தரவின் படி, 2023 டிசம்பர் மாதத்தில் 15.62 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களைவிட மிக அதிகம். 2023 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் 11.97% பேர் அதிகம் சேர்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு பகுப்பாய்வில் டிசம்பர் 2022-வுடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்த்தல்களில் 4.62% வளர்ச்சி வெளிப்படுத்துகிறது. அதிகரித்த வேலைவாய்ப்புகள், பணியாளர் நன்மைகள் குறித்த வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பொதுத் தொடர்பு திட்டங்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உறுப்பினர் அதிகரிக்கலாம்.

Advertisement

2023 டிசம்பரில் சுமார் 8.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர், இது முந்தைய மூன்று மாதங்களைவிட மிக அதிகம். முந்தைய நவம்பர் 2023 மாதத்துடன் ஒப்பிடும்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 14.21% அதிகரிப்பைக் காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது டிசம்பரில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 57.18% ஆகும்.

ஏறக்குறைய 12.02 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி பின்னர் மீண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்ததாக ஊதிய தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை முந்தைய நவம்பர் 2023 மாதத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் 12.61% அதிகரிப்பைக் குறிக்கிறது மற்றும் கடந்த ஐந்து மாதங்களில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொகையாக உள்ளது.

Advertisement
Next Article