For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK: விதியை மீறி அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட PRO...! தேர்தல் ஆணையம் அதிரடி...!

06:00 AM Apr 19, 2024 IST | Vignesh
dmk  விதியை மீறி அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட pro     தேர்தல் ஆணையம் அதிரடி
Advertisement

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மனுதாரர் எஸ்.வெயிலுமுத்து, கடந்த மார்ச் 29-ம் தேதி வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி நடத்திய அரசியல் கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்று, மாநில அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். அமைச்சர் சேகர் பாபு பங்கேற்ற கூட்டத்தின் செய்திக்குறிப்பை மக்கள் தொடர்பு அலுவலர் திவஹர் தனது அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசு ஊழியராக இருந்தும், அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சிஎம்டிஏ மக்கள் தொடர்பு அலுவலர் திவஹர் மீது தொடரப்பட்ட மனுவை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்ததை எடுத்து மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement