For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பிய நபர்களுக்கு...! அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்...!

08:49 AM Nov 17, 2023 IST | 1newsnationuser2
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பிய நபர்களுக்கு     அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்
Advertisement

சென்னை மத்திய கோட்டத்தின் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மத்திய முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Advertisement

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் முகவர்களாக முடியும். இந்த தகுதியை பெற்றுள்ள விருப்பமுடையவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். 22.11.2023 அன்று காலை 10 மணிக்கு இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் நேர்காணல் நடைபெற உள்ளது.

தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement