For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்..!! தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை..!!

Tamil Nadu Police has informed that the police protection provided to 3 political party leaders has been withdrawn.
04:12 PM Aug 20, 2024 IST | Chella
அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்     தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை
Advertisement

3 அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை ஆகியவற்றில் காரணமாக தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

அச்சுறுத்தல் இல்லாதபட்சத்தில் சிலருக்கு வாபஸ் பெறப்படும். அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய 3 பேரின் போலீஸ் காவல் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுளது.

இந்த 3 அரசியல் தலைவர்களின் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நுரையீரல் தொற்று..!! சீதாராம் யெச்சூரி எப்படி இருக்கிறார்..? மருத்துவர்கள் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Tags :
Advertisement