For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ப்ளீஸ்.. என்ன காப்பாத்துங்க..!! வேலைக்காக குவைத் சென்ற பெண்.. கண்ணீர் மல்க வீடியோ!!

People who go abroad for work are duped by fraud and suffer torture.
08:09 PM Sep 13, 2024 IST | Mari Thangam
ப்ளீஸ்   என்ன காப்பாத்துங்க     வேலைக்காக குவைத் சென்ற பெண்    கண்ணீர் மல்க வீடியோ
Advertisement

வறுமை, கடன், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைககளால் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்கின்றனர். அதில் சிலர் மோசமான பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கின்றனர். அப்படியான ஒரு சம்பவம் ஆந்திரப் பெண்ணுக்கு நடந்துள்ளது. அதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதுடன், அதற்காக இந்திய அரசு உதவ வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி கணவர் உள்ளனர். நான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக குவைத் வந்தேன். ஆனால் நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "என்னை முதலாளி அறையில் பூட்டி வைத்திருப்பதுடன், உணவும் வழங்கப்படவில்லை. இதனால் என் உடல்நிலை மோசமாகி உள்ளது. நான், தற்போது வீட்டுக் காவலில் உள்ளேன். என்னுடைய இந்த வேலைக்கான பயணத்தை ஏற்பாடு செய்த முகவர், என்னை மிரட்டியதுடன் போனில் பேசுவதற்கான வசதியையும் தடைசெய்து வைத்துள்ளார்.

இதனால் குடும்பம் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ஆகவே ஐயா என்னை காப்பாற்றுங்கள்" என ஆந்திர அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டிக்கு கோரிக்கை வைத்துள்ளார். கவிதாவின் கண்ணீர் வீடியோ, வளைகுடா நாடுகளில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பத்தை எடுத்துக்காட்டுகிறது.

Read more ; வீட்டுமனை முறைகேடு வழக்கு.. அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக உத்தரவு..!!

Tags :
Advertisement