முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே..!! அதிக மழை பெய்யும் போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! பரிதாபமாக இறந்த பள்ளி சிறுமி..!!

11:56 AM Jan 08, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே, இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவர் இடிந்து விழுந்து 4ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிஷா மற்றும் அவரது அண்ணன் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி மோனிஷா (9) உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அண்ணனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள சுவர் அருகே நிற்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Tags :
அண்ணன் படுகாயம்கனமழைசிறுமி பலிசுவர் இடிந்து விபத்துதிருவாரூர் மாவட்டம்மருத்துவமனை
Advertisement
Next Article