மக்களே உஷார்..!! அதிகரிக்கும் டெங்கு..!! 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
01:39 PM Dec 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.
Advertisement
டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து, ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.