For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Congress | "ஜெயக்குமாரை இவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும்.?" கே.எஸ் அழகிரி பேச்சால் புதிய சர்ச்சை.!!

08:46 PM May 06, 2024 IST | Mohisha
congress    ஜெயக்குமாரை இவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும்    கே எஸ் அழகிரி பேச்சால் புதிய சர்ச்சை
Advertisement

Congress: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார்.

Advertisement

இவர் மாயமான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டம் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரது மரணத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறை இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயக்குமார் எழுதியுள்ளதாக சிக்கி இருக்கும் இரண்டு கடிதங்களும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்தக் கடிதத்தில் காங்கிரஸ்(Congress) கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கடிதங்களின் உண்மை தன்மை குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இவரது இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Read More: NewsClick UAPA வழக்கு: அப்ரூவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

Tags :
Advertisement