For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட்..!! 8 மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

02:15 PM Dec 16, 2023 IST | 1newsnationuser6
இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட்     8 மாவட்டங்களில் கனமழை     வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை (டிச.17) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (டிச.16) முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :
Advertisement