முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இப்போதெல்லாம் நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குது”..!! ”பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை”..!! ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு..!!

Even the dog is B.A. DMK Organization Secretary RS Bharati's talk of getting a degree has caused controversy.
05:01 PM Jul 03, 2024 IST | Chella
Advertisement

நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.

சாதிவாரி ஒதுக்கீட்டினால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆனார்கள். எங்கள் பட்டப்படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

நாய் கூட பட்டம் வாங்குகிறது என்று ஆர்.எஸ் பாரதி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ் பாரதி தரம் தாழ்ந்து பேசி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read More : BREAKING | கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா..? என்னதான் நடக்கிறது திமுகவில்..? பெரும் பரபரப்பு..!!

Tags :
ஆர்.எஸ்.பாரதிகண்டன ஆர்ப்பாட்டம்திமுகநீட் தேர்வு எதிர்ப்பு
Advertisement
Next Article