For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்...! திமுக எம்.பி கனிமொழி எடுத்து அதிரடி முடிவு...! என்ன காரணம்...?

06:20 AM Jan 03, 2024 IST | 1newsnationuser2
யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்     திமுக எம் பி கனிமொழி எடுத்து அதிரடி முடிவு     என்ன காரணம்
Advertisement

வரும் 5-ம் தேதி திமுக எம்பி கனிமொழி அவர்களது பிறந்தநாள். இந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது அறிக்கையில்; சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Tags :
Advertisement