For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிக்கச் சென்ற "புது மாப்பிள்ளை" பலி காணும் பொங்கலில் சோகம்.! காவல்துறை தீவிர விசாரணை.!

11:59 AM Jan 18, 2024 IST | 1newsnationuser7
குளிக்கச் சென்ற  புது மாப்பிள்ளை  பலி காணும் பொங்கலில் சோகம்   காவல்துறை தீவிர விசாரணை
Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் மணிகண்டன்(23) ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோடீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

மணிகண்டன் குளத்தின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது களிமண் சேற்றில் சிக்கியிருக்கிறார். இதன் காரணமாக அவரால் நீரிலிருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கிறார் மணிகண்டன். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனையடுத்து இறந்த மணிகண்டனின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

Tags :
Advertisement