For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புரட்டிப்போடும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

01:50 PM Nov 24, 2023 IST | 1newsnationuser6
வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி     புரட்டிப்போடும் கனமழை     வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Advertisement

வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல், நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 27ஆம் தேதிக்கு பின் தமிழ்நாட்டில் மழை ருத்ரதாண்டவம் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Tags :
Advertisement