முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி...! புகை குண்டு வீசியவர் குறித்து புதிய தகவல்...! விசாரணையில் வெளியான தகவல்...!

09:10 AM Dec 14, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக செயல்பட்ட எம்.பி.,கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், நாடாளுமன்றத்தில் வண்ண புகைகுண்டு வீசிய மனோரஞ்சன் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் படி, மைசூருவை சேர்ந்த மனோரஞ்சன் இதற்கு முன் பழைய நாடாளுமன்றத்தை பார்க்கவும் பிரதாப் சிம்ஹா அலுவலகம் மூலம் அனுமதி சீட்டு பெற்றுள்ளார். இதன் காரணமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அனுமதி சீட்டு பெறுவது எளிதாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக 4 மாதங்களுக்கு மேல் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் பகத்சிங் குறித்த புத்தகங்கள் மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
centralparliamentParliament attack
Advertisement
Next Article