For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பகீர்.. பிறந்து 12 நாட்களான பிஞ்சு.." ஆண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தந்தை வெறி செயல்.!

05:32 PM Jan 17, 2024 IST | 1newsnationuser7
 பகீர்   பிறந்து 12 நாட்களான பிஞ்சு    ஆண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தந்தை வெறி செயல்
Advertisement

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தின் கோட்வள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த அணில்  உய்கே என்ற நபருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 12 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மனைவியை தாக்கி விட்டு குழந்தையை எடுத்துச் சென்ற அவர் பிறந்து 12 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் கழுத்தை நெறித்து கொடூரமாக படுகொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குழந்தையின் தந்தையை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் அந்தக் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே பச்சிளங்குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement