For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகன்களுடன் ஷூட்டிங்!. ஆயாவுக்கும் சம்பளம் கொடுங்கள்!. நிர்பந்திக்கும் நயன்தாரா!. தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!.

Producer's sensational accusation against Nayan..!?
09:32 AM Oct 10, 2024 IST | Kokila
மகன்களுடன் ஷூட்டிங்   ஆயாவுக்கும் சம்பளம் கொடுங்கள்   நிர்பந்திக்கும் நயன்தாரா   தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
Advertisement

Nayanthara: கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றும் மகன்களையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவந்து அதிகளவில் செலவு செய்வதாக நடிகை நயன்தாரா மீது தயாரிப்பாளர் ஆனந்தன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertisement

திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, 'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது.இவருக்கு சம்பளம் கொடுக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். காரணம், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த பிரபலம். நயன்தாரா சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்கிறார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது . அதனால் தங்கள் படத்தில் நயன்தாரா நடித்தால் அது படத்திற்கு பலம் சேர்க்கும் என இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் கூட நம்புகிறார்கள் .

திரையுலகில் நல்ல பெயரைப் பெற்றிருப்பதால் படப்பிடிப்புக்கு வரும்போது எந்தப் பிரச்னையும் வராது. அதேபோல், தனக்கு சொந்த வேலை இருக்கிறது என்று கூறும் நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தயாரிப்பாளரும், யூட்யூபருமான ஆனந்தன், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது இரண்டு மகன்களையும் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவருகிறார்.

அவர்களோடு குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இரண்டு ஆயாக்களையும் படத்தின் செட்டுக்கு அழைத்து வருகிறார். அழைத்து வருவது மட்டுமின்றி அவர்களுக்கான சம்பளத்தையும் தயாரிப்பாளர்தான் வழங்க வேண்டும் என்று நிர்பந்திருக்கிறார். இது நியாயமா?.. தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாக்களை அழைத்துவரும் நயன் அவர்களுக்கான சம்பளத்தை அவர்தானே கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் ஏன் கொடுக்க வேண்டும்" என்றார்.

Readmore: ஒன்றல்ல, இரண்டல்ல 69 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!. கின்னஸ் உலக சாதனை!

Tags :
Advertisement