For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மோடி vs நேரு குடும்பம் - கடும் வார்த்தை யுத்தம்..! 2ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது..!

05:25 AM Apr 25, 2024 IST | Baskar
மோடி vs நேரு குடும்பம்   கடும் வார்த்தை யுத்தம்    2ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
Advertisement

கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு நாளை (ஏப்ரல் 26) 2ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இதன்படி, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அமராவதி, சோலாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.தொடர்ந்து அமராவதியில் பேரணியிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில், நடிகையாக இருந்து அரசியல்வாதியான பாஜகவின் மதுரா தொகுதி வேட்பாளரான ஹேமா மாலினி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தன்னுடைய தொகுதியில் வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு குழந்தையை கையில் தூக்கியபடியே பிரச்சாரம் மேற்கொண்டார். 2 முறை எம்.பி.யாக பதவி வகித்த அவர், 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார். இதற்கு முன் நிறைய பணிகளை செய்துள்ளோம். இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டி உள்ளது. அதனால், மக்கள் இந்த முறையும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், கேரளாவுக்கான அனைத்து 20 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. கேரளாவில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், அவரை எதிர்த்து சி.பி.ஐ. கட்சியின் ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர். இதனால், 2-ம் கட்ட தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 247 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 226 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள் ஆவர். இதில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி கடுமையாக இருக்கிறது. மேலும் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் மற்றும் நேரு குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையானது. மேலும் இதற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பதிலடி கொடுத்தனர். பிரதமர் மோடி குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தப்பாடில்லை. இந்த நிலையில் அதிகமான வார்த்தை மோதலுடன் 2ஆம் வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.

Read More: குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்த கணவன்..! மாந்தோப்புக்குள் அரங்கேறிய கொடூரம்..!

Tags :
Advertisement