For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"EVM தேர்ந்தெடுத்த மோசடி தான் மோடி" - திருமாவளவன் தாக்கு.!

02:01 PM Feb 19, 2024 IST | 1newsnationuser7
 evm தேர்ந்தெடுத்த மோசடி தான் மோடி    திருமாவளவன் தாக்கு
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவிஎம் எனப்படும் வாக்கு இயந்திரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது

Advertisement

அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தனது 'X' சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன் " இந்தியா முழுவதிலும் ஈவிஎம் முறைக்கு எதிராக பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஈவிஎம் தேர்ந்தெடுத்த மோசடிதான் மோடி என்று வடநாடு முழுவதும் எதிர்ப்புக் குறள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார் .

மேலும் பிரதமர் மோடியை ஈவிஎம் பிரதமர் என பட்டப்பெயர் வைத்து வடநாட்டவர்கள் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 100% வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தி அதன் அடிப்படையில் தேர்தலை நடத்தி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகின்ற 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி மோசடி செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மோசடி செய்யும் நபர்களுடன் தேர்தல் ஆணையமும் மோசடி செய்கிறதா என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்திருக்கிறது. இவற்றிற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை காக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை காக்கும் பணியில் சிறுத்தைகள் களமிறங்குவோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

English summary: PM Modi is not chosen my people. He chosen as prime minister by EVM voting machine. VCK Leader Thiruvalavan attacks Modi.

Tags :
Advertisement