For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மொத்தம் 40 நாட்கள் அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணை செய்யப்பட்டது...! ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி...

06:10 AM Dec 13, 2023 IST | 1newsnationuser2
மொத்தம் 40 நாட்கள் அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணை செய்யப்பட்டது     ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி
Advertisement

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி, குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். தற்போது வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு பதில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில்; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார். ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மை பறிக்கப்பட்டது என ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement