For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நேற்று படுகொலை..!! இன்று என்கவுண்டரில் பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை..!! காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

07:25 AM Dec 27, 2023 IST | 1newsnationuser6
நேற்று படுகொலை     இன்று என்கவுண்டரில் பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை     காஞ்சிபுரத்தில் பரபரப்பு
Advertisement

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது.

Advertisement

இருவரும் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலையில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சித்தார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் கீழே சரிந்தனர்.

இதையடுத்து, உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

Tags :
Advertisement