For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’மச்சான் இவள தட்டித் தூக்குறோம்’..!! நர்சிங் மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

The three have often flirted with the girl. At some point the girl became pregnant.
01:18 PM Oct 24, 2024 IST | Chella
’மச்சான் இவள தட்டித் தூக்குறோம்’     நர்சிங் மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள்     காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
Advertisement

சமீப காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதுவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார். இவர், நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட் மற்றும் ஒலிமுகமது பேட்டை பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (21) ஆகியோர் பழகி வந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள்.

இந்த 3 பேரும் சிறுமியுடன் நண்பர்களாக பழகியுள்ளனர். இதையடுத்து, சிறுமியை அவ்வபோது வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆசைவார்த்தைக் கூறி சிறுமியுடன் அடிக்கடி மூவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதனால், பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது தயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குலசேகரன், ரித்தீஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கட் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : மனைவியை கொன்றதற்காக 4 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவர்..!! திடீரென உயிரோடு வந்ததால் வழக்கில் ட்விஸ்ட்..!!

Tags :
Advertisement