முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாதுகாப்பான டாப் 10 நகரங்கள்!… அடுத்தடுத்த இடங்களை பிடித்த தமிழ்நாடு மாவட்டங்கள்!

09:43 AM Dec 12, 2023 IST | 1newsnationuser3
Advertisement

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 78.2 என்ற குற்ற விகிதத்துடன் (IPC rate) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக நீடிக்கிறது. இந்தியாவில் பல நகரங்கள் பாதுகாப்பாக வசிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்கள் அடிப்படையில் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அங்கு வசிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன.

Advertisement

சட்ட அமலாக்கம், சமூக ஈடுபாடு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த நகரங்களின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இதனால், குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள அரசாங்க அமைப்பாகும்.

இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. கொல்கத்தாவுக்கு அடுத்த 2வது பாதுகாப்பான நகரமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்குகிறது. சென்னையில் குற்ற விகிதம் 178.5 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நகரமான கோயம்புத்தூர் பிடித்துள்ளது. கோவையில் குற்ற விகிதம் 211.2 ஆக உள்ளது.

Tags :
Chennaicoimbatoretop 10 safest citiesகோவைசென்னைபாதுகாப்பான டாப் 10 நகரங்கள்முதலிடத்தில் கொல்கத்தா
Advertisement
Next Article