முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’என்னை விட்ருங்க’..!! உடல்நிலை சரியில்லாத மாணவியை புதருக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம்..!!

Rajini threatened to take the student and raped her. Later, he threatened to kill you and your family if you tell the student about this.
03:55 PM Sep 28, 2024 IST | Chella
Advertisement

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கூலி தொழிலாளியின் 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை அன்று அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது தந்தை மற்றும் மாணவியின் தம்பி இருவருடன் அந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளனர்.

Advertisement

அப்போது, பேரணாம்பட்டு அருகேயுள்ள சாரங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி (45) என்பவர் கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அவர், அந்த மாணவியின் தந்தையிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறிய போது என்னுடைய மோட்டார் சைக்கிளில் அந்த மாணவி மற்றும் அவரது தம்பியை அனுப்புங்கள் என அழைத்துக் கொண்டு மாணவியின் தம்பியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அந்த மாணவியை தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பினார்.

வரும் வழியில் யாருமில்லாத முட்புதருக்குள் அந்த மாணவியை அழைத்துச் சென்று மிரட்டி ரஜினி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர், அந்த மாணவியிடம் இது குறித்து வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து, திரும்பி வந்த ரஜினி மோட்டார் சைக்கிளில் அந்த மாணவி மற்றும் அவரது தம்பியை அவரது தந்தையிடம் விட்டு சென்றுவிட்டார்.

பின்னர், உடல்நிலை சரியில்லாதாமல் சோர்வுடன் அந்த மாணவி இருந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் சகோதரி மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறினார். மேலும், உடல் மிகவும் சோர்வுற்ற நிலையில், அந்த மாணவி இருந்துள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரஜினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இளம்பெண்களுடன் நிர்வாண வீடியோ கால்..!! ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்த இளைஞர்..!! கடைசியில் வைத்த ட்விஸ்ட்..!!

Tags :
பாலியல் பலாத்காரம்மருத்துவமனைவேலூர் மாவட்டம்
Advertisement
Next Article