முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதால், துடிக்கத் துடிக்க கொலை.! டெல்லியில் கடன் பெற்றவரின் வெறிச்செயல்.!

02:09 PM Feb 11, 2024 IST | 1newsnationuser4
Advertisement

புதுடெல்லியில், கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட நபரை, கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தயால்பூர் பகுதியில் 58 வயது ஜாஹூருதீன் வசித்து வந்தார். அவர் காலணிகளை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். அவரது அண்டை வீட்டுக்காரரான ஷாகித், அவரிடமிருந்து ₹10,000த்தை கடனாகப் பெற்றார். பணத்தை திருப்பித் தருமாறு ஷாகித்திடம், ஜாஹூருதீன் பலமுறை கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன.

கடந்த சனிக்கிழமை, மதியம் 1.30 மணியளவில், பாரத் டெய்ரிக்கு அருகே, கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட ஹாஹுருதீனை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார் ஷாகித். ஜாஹூருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாஹாருதீனின் மகன் சொஹைல் அளித்த புகாரின் பேரில், ஷாகிதின் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதற்காக கொலையுண்ட இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
BorrowerdebtLendermoneymurdernew delhipolice investigation
Advertisement
Next Article