For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மழை வெள்ள பாதிப்பு காரணமாக 3 மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...!

06:40 AM Dec 20, 2023 IST | 1newsnationuser2
மழை வெள்ள பாதிப்பு காரணமாக 3 மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Advertisement

மழை வெள்ள பாதிப்பு காரணமாக 3 மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களே மீண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழை நீர் இன்னும் சில இடங்களில் வடியாமல் உள்ளதால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags :
Advertisement