For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்..!! ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

10:52 AM Dec 02, 2023 IST | 1newsnationuser6
தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்     ரூ 50 ஆயிரம் வரை சம்பளம்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கு டிசம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

Advertisement

சம்பளமாக ரூ. 15,700/- (15,700 - 50,000) வழங்கப்படும். பட்டியலின மக்கள், பட்டியலின அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 34 வயது வரையும், பொது பிரிவினர் 32 வயது வரையும் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை tiruppur.nic.in என்ற இணையதளத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National career service portal - www.ncs.gov.in) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும். இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement