For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிக்கிய திமுக..! கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகம்...! நாளை Part 2 வெளியாகும்...!

01:39 PM Mar 31, 2024 IST | Vignesh
சிக்கிய திமுக    கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகம்     நாளை part 2 வெளியாகும்
Advertisement

கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேச உள்ளதாக அண்ணாமலை கூறினார்.

Advertisement

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். நாளை இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கட்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேச உள்ளதாக கூறினார்.

கச்சத்தீவு பற்றி பிரதமர் மோடி

நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் அலட்சியத்தால்தான் கச்சத்தீவு பறிபோனது. 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான்.கச்சத்தீவை தாரை வார்த்தது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என பிரதமர் மோடிகச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கச்சத்தீவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்; கச்சத்தீவு 1976 இல் தாரைவார்க்கப்படுவது குறித்து 1974 ஆம் ஆண்டு கருணாநிதிக்கு தெரியும். கச்சத்தீவு குறித்து பொய் செய்திகளை பரப்பி வரும் திமுக இதற்கு பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் உடன் சேர்ந்து கச்சத்தீவை கொடுத்துவிட்டு பிறரை குறை கூறி வருகிறது திமுக என சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisement