For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! நல்ல சம்பளத்தில் போஸ்ட் ஆபீஸில் வேலை..!!

Notification has been issued for the post of Post Officer and Assistant Post Officer in Post Offices.
05:30 AM Jul 24, 2024 IST | Chella
10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்     நல்ல சம்பளத்தில் போஸ்ட் ஆபீஸில் வேலை
Advertisement

தபால் அலுவலகங்களில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 44,228 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 3,789 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்தப் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Advertisement

தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 - 29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10,000 - 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு என்பது கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2024 ஆகும். பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை காணலாம்.

Read More : இந்தியன் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement