For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலக்கரி சுரங்க மோசடி: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது..!! அடுத்த முதல்வர் யார்..?

09:20 PM Jan 31, 2024 IST | 1newsnationuser7
நிலக்கரி சுரங்க மோசடி  ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது     அடுத்த முதல்வர் யார்
Advertisement

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகிய குற்றங்களுக்காக அமலாக்க துறையினர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். 8 மணி நேர விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதனை ஆளுநர் இராதாகிருஷ்ணனும் ஏற்றுக் கொண்டார். ஹேமந்த் சோரன் பதவி விலகியதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
Advertisement