For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Breaking: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப்.20ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

01:37 PM Apr 16, 2024 IST | Kathir
breaking  ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு
Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழுக்கி மீதான இறுதிக்கட்ட விசரனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவ லை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர். தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Also Read: ’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’..!! சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்..!!

Advertisement