முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை..!! தஞ்சையில் சோகம்!!

It has been reported that a student committed suicide after failing the NEET exam near Pattukottai in Thanjavur district.
07:37 PM Aug 16, 2024 IST | Mari Thangam
Advertisement

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் சிலம்பங்காடு கிராமத்தை சேர்ந்த தனுஷ், 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Read more ; TNPSC பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

Tags :
neetNEET exam failneet student suicideThanjavur
Advertisement
Next Article