For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Water: கர்நாடகாவுக்கே இந்த நிலைமையா?… அப்போ தமிழ்நாட்டுக்கு!… விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சனை!

06:03 AM Feb 27, 2024 IST | 1newsnationuser3
water  கர்நாடகாவுக்கே இந்த நிலைமையா … அப்போ தமிழ்நாட்டுக்கு … விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சனை
Advertisement

Water: வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது

Advertisement

குளிர்காலம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தை தொடர்ந்து வந்த குளிர் காலம் தற்போது வரை தமிழகத்தில் நீடித்து வருகிறது. மார்கழி, கார்த்திகை மாதங்களில் பல பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. தற்போது மாசி மாதம் பிறந்தது முதலாக அதிகாலை பனிப்பொழிவு குறையத் தொடங்கியுள்ளது.

இன்னும் கோடைக்காலமே தொடங்காத நிலையில் வெயில் இப்படி வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவிவருகிறது. அதாவது, தற்போதைய சூழலில் கர்நாடக மாநிலத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 46 தாலுக்காக்களில் குடிநீர் தட்டுப்பாடு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் 183 தனியார் போர்வெல், 58 டேங்கர்கள் மூலம் மேற்சொன்ன தாலுக்காக்களில் உள்ள 156 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் 7,082 கிராமங்கள் மற்றும் 1,193 பெங்களூரு புறநகர் மாவட்ட வார்டுகளில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மாநில அரசு சில ஆய்வுகளை செய்தது. அதன் முடிவுகளில் கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சினை எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதுசரி, எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு என்று தேடிப் பார்க்கலாம். கர்நாடகாவில் மொத்தம் 31 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் குடிநீர் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பது துமகுரு மாவட்டம். இங்குள்ள 746 கிராமங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகப்படியான வார்டுகளில் பாதிப்பை சந்திக்கக் கூடிய மாவட்டம் என்று பார்த்தால் உத்தர கன்னடா முன்வந்து நிற்கிறது. தகவல் தொழில்நுட்ப தலைநகரம், சிலிக்கான் வேலி என்று புகழப்படும் பெங்களூரு நகரம் அமைந்துள்ள பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 174 கிராமங்களும், 120 வார்டுகளும் குடிநீர் தட்டுப்பாட்டில் தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சித்ரதுர்கா, தாவனகரே, மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர், பிடார், சிக்கமகளூரு, குடகு ஆகிய மாவட்டங்களில் பெரிதாக பாதிப்பு வராது என்று கூறப்படுகிறது.

Readmore: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பு.! ரூ.2,50,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Tags :
Advertisement